நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.

நெமிலி அருகே புகழ்பெற்ற வேடந்தாங்கல் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்.
108 சீர்வரிசைகளுடன் மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபோகம்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருகல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 108 சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்தனர். ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது…
இதில் சுற்றியுள்ள 20-கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.