நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்…
நாடாளுமன்றத் தேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து உதகை மலை ரயில் நிலையம் முன்பு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்ற் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மலை ரயில் நிலையம் முன்பு துவங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காபி ஹவுஸ் சதுக்கத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.