கொடைக்கானல் செக் போஸ்டில் விதிகளை மீறி நுழையும் தனியார் பேருந்து

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ரெகுலர் சர்வீஸ் பயணிகள் பேருந்து கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டில் இருந்து கிளவரை ,பூம்பாறை ,போலூர் , கவுன்சி போன்ற கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் செல்வது வழக்கமாக உள்ளது. இதில் கொடைக்கானல் மலைச்சாலையில் வெள்ளி நீர் வீழ்ச்சியில் டோல்கேட் அமைத்து நுழைவு கட்டணம் கொடைக்கானல் நகராட்சியால் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இச்சூழ்நிலையில் அனைத்து வாகனங்களும் பேருந்துகளும் லாரிகளும் நுழைவு கட்டணம் செலுத்தி கொடைக்கானலுக்கு வரும் சூழ்நிலையில் இந்த ஒரு பேருந்து மட்டும் விதிகளை மீறி நுழைவு கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது. கொடைக்கானலுக்கு காலை 8:15 மணிக்கு வரும் ஏ வி ஆர் என்ற தனியார் பேருந்து மீண்டும் மதியம் ஒரு மணி அளவில் மீண்டும் வத்தலகுண்டுக்கு செல்லும் கே வி ஆர் என்ற தனியார் பயணிகள் பேருந்து விதிகளை மீறி டோல்கேட்டில் வாகனங்கள் கீழ் இறங்கும் பாதையில்(oneway) சாலையில் வருவதும் போவதுமாக வழக்கமாகக் கொண்டுள்ளார்.
one way சாலையில் எதிரே ஆம்புலன்ஸ் வாகனம் வந்தாலும் சாலையில் இடம் ஒதுக்கி கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. கொடைக்கானல் நகராட்சி இரண்டு கட்டணம் வசூலிக்கும் சாவடி ஏற்படுத்தி க் கொடுத்த பிறகும் இப்படிப்பட்ட சம்பவம் அரங்கேறி வருகிறது , கொடைக்கானல் நகராட்சி டோல்கேட் ஊழியர்கள் பேருந்தை நிறுத்தி கேள்வி எழுப்பிய பொழுது நான் அப்படிதான் செல்லுவேன் என்று திமிர் பேச்சுகளில் சத்தமாக பேசுகின்றனர் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும்,பொது மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்…