BREAKING NEWS

மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி.

மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி.

திருச்செங்கோடு பகுதியில் மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி. குடும்பத்தினருடன் மகிழ்ச்சி பொங்க கண்டு களித்தனர்…..

கடும் கோடை வெயிலிலும் நகரை தூய்மையாக வைத்திருக்க உழைக்கும் தூய்மை பணியாளர்களை உழைப்பாளர் தினத்தில் மகிழ்விக்கும் வகையில் திருச்செங்கோட்டில் உள்ள தெய்வம் திரையரங்கத்தில் ரோமியோ திரைப்படம் பார்க்க
திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுஏற்பாடு செய்திருந்தார்.

காலைக்காட்சிக்கு குடும்பத்துடன் வந்த தூய்மை பணியாளர்களை வரவேற்று உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியதை தொடர்ந்து நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர மன்ற உறுப்பினர்கள், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு ஆகியோருடன் 300க்கும் மேற்பட்டோர் ரோமியோ திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

கோடை வெயிலின் தாக்கம் மழை கலங்கள் என இக்கட்டான காலங்களிலும் தூய்மை பணியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் அவர்களின் மன அழுத்தங்களை குறைக்கும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது….

CATEGORIES
TAGS