BREAKING NEWS

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது ஜூஜூவாடி சோதனை சாவடி வழியாக அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்
கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக போதை தடுப்பு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து இன்று போலீஸார் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து ஜூஜூவாடி சோதனை சாவடி வழியாக வந்த அரசு நகர பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சந்தேகம்படியாக இருந்த வாலிபரின் டிராவால்ஸ் பேக்கை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில், அஞ்செட்டி அடுத்த சித்தாண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (27) என்பதும், அவர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்திக்கொண்டு பெங்களூர் வரை ரயில் மூலம் வந்து, அங்கிருந்து பேருந்தில் ஓசூருக்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

CATEGORIES
TAGS