அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் தீமிதித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.. இக்கோயில் சுமார் 2000 குடும்பங்களுக்கு குலதெய்வமாக உள்ளது இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திமீதி திருவிழா நடைபெறும் இந்த ஆண்டு 57-ம் ஆண்டு தீமிதி திருவிழாவை ஒட்டி, இக்கோயிலை சுற்றி உள்ள கிராம மக்களும் குலதெய்வமாக வழிபடுவோரும் கடந்த ஒரு வாரத்திற்கு காப்புகட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.
நேற்று தீமிதி திருவிழாவை ஒட்டி,கரகம்,பால்குடம், அலகு காவடிகளை காவேரி ஆற்றங்கரையிலிருந்து,புறப்பட்டு, கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது பக்தர்கள் வீடுகள் தோறும் கரகம்,காவடிக்களுக்கு தீபாராதனை எடுத்து பொதுமக்கள் வழிபட்டனர் தொடர்ந்து கோயிலை வந்தடைந்தது.பின்னர் கோயில் எதிரில் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில்,மேள தாளம் முழங்த,விண்ணை பிளக்க வைக்கும் வாணவேடிக்கை நடைபெற, கரகம்,அலகு காவடிகள் தீ குண்டத்தில் இறங்கி தீமிதி திருவிழா நடைபெற்றது. இத்தீமிதி திருவிழாவை, மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமவாசிகள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு களித்தனர்.அதனைத் தொடர்ந்து நேற்று இரவு
கௌரி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.