BREAKING NEWS

திருநாவுக்கரசர் குருபூஜை விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் சார்பில் சதிர் சலங்கை விழா மதுரை ஆதீனம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

திருநாவுக்கரசர் குருபூஜை விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் சார்பில் சதிர் சலங்கை விழா மதுரை ஆதீனம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் திருநாவுக்கரசர் குருபூஜை விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் சார்பில் சதிர் சலங்கை விழா மதுரை ஆதீனம் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள இறைவி நுண்கலைப் பள்ளியின் சார்பில் திருநாவுக்கரசர் குருபூஜை விழாவினை முன்னிட்டு சதிர் சலங்கை விழாவினை நடத்தினார்கள்.

விழாவினை மதுரை ஆதீனம் திருஞானசம்பந்த தேசிய பிரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். விழாவில் மாணவிகள் சலங்கை அணிந்து சிவபுராணம் பாடலுக்கு நாட்டியத்தினை அரங்கேற்றினார்கள் மேலும் நடராஜர் புஷ்பாஞ்சலி கணேச பஞ்சரத்தினம் தீராத விளையாட்டுப் பிள்ளை ஹரிவராசனம் உள்ளிட்ட பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இறைவி நுண்கலைப் பள்ளி நிறுவனர் ஆனந்த் ஜெயராம் தலைமையில் கல்வி குழுவினர் செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS