BREAKING NEWS

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததால்,கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் முதல் கட்டமாக தேர்தல் முடிந்தது. இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்றும் முடிந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து 5 நாள் ஓய்வெடுக்க நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்து உள்ளார்.

இதையொட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிய கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தனது குடும்பத்தினருடன் உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து இறங்கினார்.அப்போது அவருடன் கர்நாடகா மின்சார துறை அமைச்சர் ஜார்ஜ்,
சமூக நலத்துறை அமைச்சர் மாதேவப்பா, எம்.எல்.சி. கோவிந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிளம்பி உதகை ஹேவ்லாக் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவிற்கு சென்றார்.

வருகிற 11ம் தேதி வரை 5 நாட்கள் இங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். மேலும் ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கர்நாடக முதல்-மந்திரி வருகையையொட்டி கர்நாடகா மற்றும் நீலகிரி போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS