சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.

சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கையநல்லூர் ஸ்ரீ புத்தடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த எட்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பால்குடம் அலகு காவடிகளுடன் சக்தி கரகம் வீதி உலாவாக எடுத்து வரப்பட்டது தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் மகா தீபாரதனையும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.