BREAKING NEWS

வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.

வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.

வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில், புதிய நீதிக் கட்சி தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் ஆணைக்கிணங்க, வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் வேலூர் மாவட்ட தலைவர் ஜி.பி.கே.பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

மாநிலத் தலைவர் லோகநாதன், மாவட்டச் செயலாளர் பரத், மண்டி ஜெயப்பிரகாஷ், நகர செயலாளர் குமரகுரு, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு முருகேசன் ஆகியோரின் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதிய நீதிக் கட்சியின் நிர்வாகிகள் கார்த்திக், பிரபு, ஓல்டு டவுன் பாஸ், எஸ்.ஆர். செல்வம், கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு அன்னையர் தின விழாவை சிறப்பித்து அன்னதானம் வழங்கினர்.

பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர். அன்னையர் தின விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளுக்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS