BREAKING NEWS

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பெருங்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வடக்குமாங்குடி அருகே உள்ள பொய்கை ஆற்றங்கரையில் கிராமவாசிகள், சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

அங்கு கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் இறங்கி பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பெருங்கரை கிராம வாசிகள் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS