BREAKING NEWS

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்த மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பஸ் பயணிகள் தப்பி ஓடினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட பஸ் நிலையத்தில் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மட்டும் இன்றி திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி வந்தனர் மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் பஸ்காக காத்திருந்தனர் அப்பொழுது பஸ் நிலையத்திலிருந்து மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்து பஸ் நிலையத்திலிருந்த டிரைவர் பஸ்களை அவசர அவசரமாக எடுத்துச் சென்றனர் மேலும் அங்கிருந்த பஸ் பயணிகளும் தப்பி ஓடினர் இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மின்சாரத்தை உடனடியாக நிறுத்தி மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்தில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் சகஜ நிலைக்கு திரும்பியது.இரவு விட்டுவிட்டால் பெய்த மழை காரணமாக மில் கசிவு இருந்திருக்கலாம் எனவும்,அதன் மூலம் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS