BREAKING NEWS

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூர் சைதாப்பேட்டை விநாயகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அத்துடன் அவர் கோடை மட்டுமின்றி தொடர்ந்து பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கும் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டார்.

அத்துடன் பொதுமக்களிடமிருந்து தனக்கு எவ்வித புகார் வரக்கூடாது என்று அவர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS