BREAKING NEWS

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.

ராமநாதபுரம் மாவட்டம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது அது மட்டுமல்லாமல் முதுகுளத்தூர் அடுத்த பேரையூரை சேர்ந்த காவியா ஜனனி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார் இதனை அடுத்து மாணவியை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தமிழின வேந்தர் ஜான் பாண்டியன், இளைஞரணி தலைவர் மருத்துவர்.

வியங்கோ பாண்டியன்,மகளிர் அணி தலைவி மருத்துவர். வினோலின் நிவேதா, ஆகியோரின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் முருகன் தலைமையில் நேரில் சென்று பூங்கொத்து மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதில் கழக நிர்வாகிகள் திருப்பதி, தேவேந்திர பாண்டியன், உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனார்

CATEGORIES
TAGS