BREAKING NEWS

கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி பாலாடை, குழந்தைகள் பரிசு பெட்டகம் மருத்துவர் அணி சார்பாக வழங்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி பாலாடை, குழந்தைகள் பரிசு பெட்டகம் மருத்துவர் அணி சார்பாக வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த தினம் நேற்று தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் அணி சார்பாக நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி பாலாடை வழங்கப்பட்டது.

மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம் எல் ஏ நிவேதா முருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் நகரமன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா வெள்ளி பாலாடை மற்றும் குழந்தைகளுக்கான உபயோக பொருட்களை வழங்கினர்.

இதில் அரசு தலைமை மருத்துவர் செந்தில்குமார் மருத்துவர் மருதவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும் நேற்றைய தினம் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வழங்குவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஷாவலியுல்லாஹ் தலைமையில் சுப்ரமணியபுரத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. பூம்புகார் எம்எல்ஏ உணவுகளை பொதுமக்களுக்கு பரிமாறினார்.

Share this…

CATEGORIES
TAGS