BREAKING NEWS

ஒருங்கிணைந்த வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார்.
வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் டாக்டர். அம்பேத்கர் முழு திருவுருவச் சிலையை பாராளுமன்ற வளாகத்திலிருந்து அப்புறப்படுத்திய மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாகி தங்கராஜ் தலைமையில், வேலூர் மாவட்டத் தலைவர் இராசி. தலித்குமார் வரவேற்புரையாற்ற இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன பேருரையாற்ற இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான டாக்டர். செ.கு.தமிழரசன் கண்டன பேருரையாற்றி, கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என முப்பதுக்கும் மேற்பட்டோர் கட்சி கொடிகளை கையிலேந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என செ. கு. தமிழரசன் தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்ட இறுதியில் மாவட்ட பொருளாளர் எஸ்.வெங்கடேசன் நன்றியுரையாற்றி ஆர்ப்பாட்டம் நிறைவுப்பெற்றது.

Share this…

CATEGORIES
TAGS