குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த குவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இக்கோயிலில் இந்த திருவிழா சில நாட்களுக்கு முன்பு கோலாகல கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரவுபதி அம்மன், , தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலா வும் நடைபெற்றது.
இவ் விழாவில் புகழ்பெற்ற பூசாரிகளை கொண்டு மகாபாரதம் கதை படித்து தருமர் பிறப்பு, அர்ச்சுனன் பிறப்பு, அம்மன் பிறப்பு, அர்ச்சுனன் வில் வளைத்தல், அர்ச்சுனன் மாடு விரட்டுதல், திரௌபதி திருமணம் , பூச்செறிதல், அரவான் கடபலி உள்ளிட்ட 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தினத்தை மண்டகப்படியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வகையறாக்களும் திருவிழாவாக கொண்டாடி இறுதி நாளன்று திரௌபதி அம்மனுக்கு நேர்த்திக்கடன் முடிக்க பக்தர்கள் திரளாக திரண்டு இருந்தனர்
முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பெரிய ஏரிக்கரையில் இருந்து , பூங்கரகத்துடன் பம்பை, மேளம் நாதஸ்வரம் மங்கல இசையோடு முக்கிய வீதி வழியாக வந்த பக்தர்கள் கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை சுற்றி வலம் வந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில் சிலர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடி அம்மன் நாமத்தை உச்சரித்தவாறு தீமிதித்தனர்
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர் பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மூன்றுஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மனின் அருளாசி பெற்றுச் சென்றனர். இந்த வருடம் புதிய தேர் செய்து தேர் இழுத்தது குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர் D. வேல்முருகன் .