கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புகரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னையில் வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவது வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வழக்குரைஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டுள்ள குற்றவியல் சட்டங்கள் மாற்றத்தை திரும்ப பெற வேண்டும். என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.