முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு

முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம்
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு
எனக்கு ஜாதி வேண்டாம் . எந்தவித சலுகைகளும் வேண்டாம். ஜாதியற்ற கிறிஸ்தவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் . முதல்வர் கவனத்திற்கு என்னுடைய போராட்டம் செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்து கொண்டேன் என்று ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு தெரிவித்தார். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் செல்போன் டவர் மீது ஏறி ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு நூதன போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையில் (ஆர்பிஎப்) ஏட்.டாக வின்சென்ட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சி . இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியதாக கூறப்படுகிறது. இவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தங்கி இருந்து அரக்கோணத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திடீரென அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது 150 மீட்டர் உயரத்தில் ஏறி நின்று பேனர் ஒன்றை பிடித்தபடி நூதன போராட்டம் நடத்தினார்.
இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் செல்போன் டவர் மீது ஏறி நின்று நூதன போராட்டம் நடத்திய வரை கீழே இறங்குமாறு பல தடவை கூச்சலிட்டும் அவர் கீழே இறங்கி வரவில்லை .
இதற்கு இடையே அந்த ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் மற்றும் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு வந்து தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .உங்கள் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே அனைத்து மீடியாக்களும் இங்கு வந்துள்ளன. கீழே இறங்கி வாருங்கள் என்று தெரிவித்தனர்