ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் என சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தில் சாம்பார் சாதம், ரசம் சாதம், ரவா கேசரி, மசால் வடை ஆகியவற்றை அன்னதானமாக நண்பகல் 12 மணியிலிருந்து இடைவிடாது வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கிருத்திகையின் போதும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து இடைவிடாது நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த கமலவிநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த அன்னதா
னம் வழங்கும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொழிலதிபர் காட்பாடி செங்குட்டை மாடு விடும் வீதியைச் சேர்ந்த அச்சுதன் -அமுதா தம்பதியர் செய்திருந்தனர். பொதுமக்கள், முருக பக்தர்கள் மற்றும் காவடி கொண்டு சென்றவர்கள் வரிசையில் வந்து நின்று இந்த அன்னதானத்தை வாங்கி சுவைத்து தங்களது பசியை இளைப்பாற்றி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.