எஸ்ஐபி அகாடமி இந்தியா,சார்பில் அபாகஸ் போட்டி 1000 மாணவர்கள் பங்கேற்றனர்
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று, எஸ்ஐபி அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்றனர்
கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று எஸ்ஐபி அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 1000 எஸ்ஐபி அபாகஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் உஷாராணி கலந்து கொண்டார்.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், அபாகஸ், பெருக்கல் மற்றும் காட்சி எண்கணிதத் தொகைகளை உள்ளடக்கிய 300 கணிதப் தீர்வுகளை குழந்தைகள் 11 நிமிடங்களில் தீர்த்தனர். 7வது பதிப்பாக நடைபெற்ற இந்த போட்டிகளானது மண்டல அளவில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு தேசிய நிகழ்வுகள் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்ற போட்டியின் நிகழ்வுகள் 4 முறை லிம்கா சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. எஸ்ஐபி அபாகஸ் இந்தியா பயிற்சியாளர்கள் முன்னிலையில், 1000 மாணவர்களின் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்ஐபி மாநில தலைவர் ரவி சங்கர் கூறும் பொழுது..