வடகரம் பூண்டி கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வீரமணி என்கின்ற இளைஞர் கைது
திட்டக்குடி அருகே வடகரம் பூண்டி கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வீரமணி என்கின்ற இளைஞர் போலீசார் கைது செய்து
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வடகராம்பூண்டி கிராமத்தில் பெரியசாமி மகன் வீரமணி என்பவர் வீட்டில் உள்ள தோட்டத்தில் வெண்டைக்காய் மற்றும் முருங்கை, வாழை மரங்களை வைத்து பயிர் செய்து வந்த நிலையில்
அந்த செடிகளின் இடையில் கஞ்சா செடியையும் நான்கு மாதங்களாக வளர்த்து வந்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார் விசாரணை செய்ததில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது .
வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடியை வளர்த்த வீரமணி என்கிற இளைஞனை ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர் .
CATEGORIES கடலூர்