BREAKING NEWS

ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அரியலூர்- ஜெயங்கொண்டம் அருகே கல்வெட்டு கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட கஞ்சி கலையம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

அரியலூர் மாவட்டம் கல்வெட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சி கலயம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தல் திருவிழா நடைபெற்றது.
இதில் கல்வெட்டு கிராமத்தில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சி கலயம், தீ சட்டி, முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இந்த வீதியுலா நிகழ்ச்சியானது கோவிலில் இருந்து துவங்கி உருமி மேளத்துடன் கல்வெட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் கோவிலை வந்தடைந்ததும் நேர்த்திக்கடன் செலுத்த கஞ்சி கலயம் பால்குடம் அக்னி சட்டி சுமந்த பக்தர்கள் கஞ்சிகளை அம்மனுக்கு படைத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பியவாறு அம்மனை வழிபட்டனர். இதில் பக்தர்கள் எடுத்து வந்த கஞ்சியை அன்னதானமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியை கல்வெட்டு கிராமத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மன்ற சக்திகள், செவ்வாடை தொண்டர்கள், ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS