BREAKING NEWS

அரசியல்

அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் மக்கள் குறைகளை தீர்ப்பதற்காக தங்களுடைய வார்டு பகுதியில் நகர மன்றம் அலுவலகம் அமைக்கப்பட்டு என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு உறுதி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 33 வது வார்டு வேட்பாளர் ஆண்டாள் முருகன்,32 வது வார்டு வேட்பாளர் கவியரசன், 34 வது வார்டு வேட்பாளர் மாரிமுத்து,ஆகியோரை ஆதரித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வீதி வீதியாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில் :

அதிமுக அனைத்து வார்டுகளில் வெற்றி பெற்றால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் போக வேண்டியதில்லை உங்கள் வார்டு பகுதியில் நகர மன்றம் அலுவலகம் அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் குறித்து அந்த உறுப்பினரே அனைத்து குறைகளையும் கேட்டறிந்து தீர்வு காண்பார்.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிதான் திமுக ஆட்சி.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )