BREAKING NEWS

ஆம்பூர்

ஆம்பூரில் ஓய்வு பெற்ற மின்சாரத் துறை செயற்பொறியாளர் காரில் கொண்டு வரப்பட்ட 75 ஆயிரத்து 660 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம்.

ஆம்பூர் பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வேலூர் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த ஒய்வுபெற்ற மின்சாரத்துறை செயற்பொறியாளர் (ஊழல் தடுப்பு பிரிவு) ராமச்சந்திரன் என்பவர் வந்த காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 75 ஆயிரத்து 660 ரூபாய் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )