சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா

சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழாதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் சங்கரன்கோவில் நகர மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா நடைபெற்றது.
மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.மு ராசேந்திரன் விழாவை முன்னிட்டு ராஜபாளையம் சாலையில் உள்ள பரிபவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாலை சங்கரநாராயண சாமி கோவிலில் தங்கத் தேரினை மதிமுகவினர் இழுத்தனர். விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் இல. சுதா பாலசுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் பொன். ஆனந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாஜலபதி, சுப்புலாபுரம் மணி, நகர செயலாளர் ரத்னவேல் குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகம்மது ஹக்கீம், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ்,
துணை சேர்மன் முருகேஸ்வரி கோட்டியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், டாக்டர் ரவி மாரிமுத்து, ராஜகோபால், செல்வகுமார், சீனிவாசன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் மோகன்தாஸ், டாக்டர் சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, இணையதள அணி நிர்வாகிகள் சங்கரசுப்பு, ரமேஷ் சங்கரன், ராகவன் ராஜகோபால், நகர துணை செயலாளர்கள் முருகேசன், அழகு வேல்முருகன்,
நிர்வாகிகள் மாரிச்சாமி, பூக்கடை பொன்னுச்சாமி, பாலமுருகன், ஆறுமுகம், ராமசாமி, காளியப்பன், காளிமுத்து, குருசாமி, சக்திவேல், சங்கரநாராயணன், சுப்பையா, மைதீன், ராஜலட்சுமி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.