BREAKING NEWS

சென்னை

மழலையர் வகுப்புகளுக்கு அனுமதி? திரையரங்குகளில் 100% அனுமதி?… ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக c மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. எனவே, ஜனவரி மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  ஓட்டல்கள், தியேட்டர்களில், ஜவுளி கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியது.இதையடுத்து இரவு நேர ஊடரங்கு கடந்த 28ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைகிறது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைய தொடங்கியுள்ளது. தற்போது, தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,200க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னையிலும் 650க்கும் கீழ் உள்ளது. இதனால், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

இதை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி அளிப்பது, உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிப்பது, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் பேரை அனுமதிப்பது, துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிப்பது, கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிப்பது, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிப்பது, அனைத்து திரையரங்குகளிலும் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.  அதேபோன்று மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )