BREAKING NEWS

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகராட்சி 11வது வார்டு அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன இதில் 11வது வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படாததை அடுத்து அண்ணா திமுக நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையாவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வேட்பாளர் சுரேஷ் நகராட்சி கடை வாடகை காரராக இருந்து வருவதால் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது கடந்த 20 ஆண்டுகளாக நகராட்சி கடையை வாடகைக்கு எடுத்துள்ளார் இவரது தந்தைக்கு பிறகு இவர் வாடகை செலுத்தி வருகிறார் இதுவரை வாடகை பாக்கி இல்லை எனவும் கடந்த முறை இவரது மனு ஏற்பட்ட நிலையில் இந்த முறை நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )