BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான வாக்குப்பபதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான வாக்குப்பபதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 174 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 6 வாக்குப்பதிவு மையங்கள் இயங்கின.

வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் இந்த பேரூராட்சியில் ஆண்கள் 6209, பெண்கள் 6954, இதர பாலினம் 11 என மொத்தம் உள்ள 13174 வாக்காளர்ள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்ய 6 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

15 வார்டுகளில் 56 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் திமுக 15 வார்டுகள், அதிமுக 15, பாஜக 3, அமமுக 8, நாம் தமிழர் 9, பாமக 1 வார்டிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. வல்லம் பேரூராட்சியில் காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாலை 6 மணி வரை மொத்தம் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )