BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கொடைக்கானல் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பழனி எம்எல்பிபி செந்தில்குமார் பிரச்சாரம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டி வருகிறது. வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பழனி தொகுதி எம்எல்ஏ ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது ‘திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் கீழ்க்குண்டாறு குடிநீர் திட்டம். இந்தத் திட்டத்தால் கொடைக்கானலில் குடிநீர் பஞ்சம் நீங்கி உள்ளது.

 

 

கொடைக்கானலில் உள்ள அனுமதியற்ற கட்டிடங்கள் வரைமுறை படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தற்போது கொடைக்கானல் நகராட்சி பகுதியில் தமிழக அரசு செய்து வருகிறது .கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் மரிய ஜெயந்தன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகமது இப்ராஹிம், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேட்பாளர்கள் அறிமுக படுத்தப்பட்டனர். தலைமை கழக பேச்சாளர் காந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பழனி எம்எல்ஏ. ஐ .பி .செந்தில்குமார் பேசினார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )