தலைப்பு செய்திகள்
புதியதாக மசூதி அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இரு பிரிவு மக்கள் கூடியதால் பரபரப்பு.
புதியதாக மசூதி அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இரு பிரிவு மக்கள் கூடியதால் பரபரப்பு.
வேலூர் சைதாப்பேட்டை சர்க்கார் மண்டி தெருவில் புதிதாக மசுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தரப்பில் அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
மசுதி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் திரண்டனர். அதே சமயத்தில் மசுதி அமைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் திரண்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு பகுதியினரை வெளியே வராமல் தடுப்பதற்காக கயிறு கட்டி அரண் போல் நின்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் இரு தரப்பினரிடமும் தரப்பினரிடம் வேலூர் கோட்டாட்சியர் மற்றும் Sp பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.