BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்,

அதேபோல் தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர், இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி புண்ணியமூர்த்தி ரமேஷ் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )