BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தர மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தர மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருச்சியில் பெற்றோர் பேட்டி:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழ முல்லைக்குடிக்குத் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்.
விவசாயியான இவருக்கு 3மகன்கள் உள்ளனர்.

 

இதில் கடைசி மகனான அஜித்(23). உக்ரைன் நாட்டில் உள்ள டெர்னாபெல் ஹாஸ்டலில் தங்கி பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டதை தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இதில் சிக்கி தவிக்கும் தனது மகனை மட்டும் அல்லாது அவருடன் சேர்ந்து படிக்க கூடிய அனைத்து மாணவர்களையும் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜித்தின் பெற்றோர் பேட்டி அளித்தனர்.

அதில் தனது மகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பேசும்போது அங்கு உள்ள போர் நிலவரம், மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து பேசினான்.

ஆனால் இன்று அவன் பேசுகையில் மிகுந்த பதட்டத்துடனே பேசினான்.
ஆங்காங்கே குண்டு வெடித்து வருவதாகவும் ஹாஸ்டலை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளதாகவும் அஜித் கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விமான டிக்கெட்
60ஆயிரம் ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேல் செலவாகும் என தெரிவிக்கிறார்கள்.
போர் நடப்பதால் தற்போது விமானங்கள் இல்லை எனவும்,
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மகன் மற்றும் அவருடன் படிக்கக்கூடிய சக மாணவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )