BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா நடைபெற்றது. கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் இளைஞர் சமுதாயத்துக்கு சங்கத்துக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகமங்கலம் வழியில் வந்த ஐகோர்ட் ஸ்ரீ மகாராஜா அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

கடந்த 18ம் தேதி அன்று கால் வைத்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 மணி அளவில் ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் தீர்த்தம் குடம் எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு தீபாராதனைகள் முளைப்பாரி ஊர்வலம், நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமக் கொடை, பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

‌இதில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் தலைவர் மகேஷ் பாலா, செயலாளர் சோலை, பொருளாளர் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், முன்னாள் கவுன்சிலர் ஆரோக்கியராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )