BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சி மணிகண்டன் 1,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி 41- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மணிகண்டன் என்பவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 1,231 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில் தனக்கு வாக்களித்த 41- வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களை நேரடியாக சந்தித்து கவுன்சிலர் மணிகண்டன் நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று அவர் அருளானந்த நகர் பகுதியிலுள்ள 1 முதல் 10 வரை உள்ள தெருக்களில் இருக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது 41 வது வட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா, பிரதிநிதிகள் மேரி சுந்தர், விக்டர், முன்னாள் வட்ட செயலாளர் சந்திரன், அதிமுக நிர்வாகிகள் சச்சிதானந்தம், பொருளாளர் தில்லைநாதன், சங்கர் கண்ணாடி ராஜ், சரவணன், செந்தில் கனேஷ், சேகர் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )