தலைப்பு செய்திகள்
உடுமலையில் பட்டபகலில் அதிமுகவினர் வைத்த பேனர் கிழிப்பு காவல்நிலையத்தில் புகார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு அனுஷம் திரையரங்கம் கார்னர் பகுதியில் அதிமுகவினர் பேனர் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பட்டபகலில் கிழிக்கபட்டு உள்ளது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அதிமுக பேனரை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில் .
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைக்கப்பட்ட அதிமுக பேனர் வைக்கப்பட்டுள்ளது பேனர் வைத்து இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா இருந்தும் பழுதடைந்து காணப்படுகின்றது கண்காணிப்பு கேமரா சரியாக இருந்தால் மர்மநபர்கள் யார் என்று தெரிந்து இருக்கும் , ஆகையால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பேனரை கிழித்த நபர்களை விரைவில் பிடிக்க வேண்டுமென காவல் துறையில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
உடுமலையில் பட்டப்பகலில் அதிமுக பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.