BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சென்னை சிறுமி வன்கொடுமை  மருத்துவ மாணவர், துணை நடிகர் கைது.


போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவ கல்லூரி மாணவர், சினிமா துணை நடிகர் உட்பட நான்கு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி எனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந் நிலையில் சிறுமியின் பாட்டி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், எனது பேத்தி வீட்டருகே உள்ள கடைக்கு சென்று தினமும் பானிபூரி சாப்பிட்டு சென்று வரும்போது தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் மாணவர் வசந்தகிரிஷ் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவ மாணவன், எனது பேத்தியின் இன்ஸ்டாகிராம் ஐடியை வாங்கி அவருடன் தினமும் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வசந்தகிரிஷ், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு எனது பேத்தியை அழைத்து சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது பேத்தியுடன் பாலியல் உறவு கொண்டதை வசந்தகிரிஷ், தனது நண்பர்களான சதீஷ்குமார், விஷால், தனியார் கல்லூரி பகுதி நேர உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வசந்தகிரிஷின் நண்பர்கள், எனது பேத்தியிடம் உனக்கும், வசந்த கிரிஷுக்கும் இடையே நடந்த விஷயத்தை வெளியில் செல்லாமல் இருக்க தங்களுடன் பாலியல் வன்புணர்வுக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று எனது பேத்தியை வசந்தகிரிஷின் குடியிருப்புக்கு வரவழைத்த 4 பேரும் போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். வீட்டில் பதற்றத்துடன் பயந்தது போல் எனது பேத்தி இருந்ததால் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்ததாகவும், அப்போதுதான் நடந்த உண்மைகளை தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ கல்லூரி மாணவர் வசந்தகிரிஷ் (20), சினிமா துணை நடிகர் சதீஷ்குமார் (22), விஷால் (19), கல்லூரி உதவி பேராசிரியர் பிரசன்னா (32) ஆகிய நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 13 வயது சிறுமியை ஏமாற்றி 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )