BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இருபது நாட்களாக அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்.

இருபது நாட்களாக அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள். கனமழை அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் அச்சம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுவதால் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் சுமார் 25,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அறுடை செய்து 20 நாட்களாக நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்துகிடப்பதாகவும், இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறுகின்றனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் 700 முதல் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். தற்போது ஆன்லைன் பதிவு முறையால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதால், பழைய முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும், மேலும் 3ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளாதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனடியாக நெல்லை கொள்முதல் செய்யாவிட்டால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகத்தையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெல்லைக் கொட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் விவசாயிகள் எச்சரிக்கை.
.தர்மா சுவாமிநாதன், காவிரி டெல்டா விவசாய பாதுகாப்பு நிறுவன தலைவர் அன்பழகன் விவசாயி ஆலங்குடி.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )