BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உடுமலை திருமூர்த்திமலை யில் மகா சிவராத்திரி வழிபாடு.

திருமூர்த்தி மலைக்கு திருச்சப்பரம் ஊர்வலம் புறப்பட்டது.

உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று திரு சப்பர பூஜை நடக்கிறது.
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர்கோவிலில் சிறப்பு அம்சமாக சிவராத்திரியன்று மூலவர் ஆலயத்திற்கு மேல் உள்ள கோபுரம் திருச்சப்பரமாக கொண்டுவரப்பட்டு சிவராத்திரி பூஜைகள் துவங்குவதற்கு முன் மும்மூர்த்திகளின் ஆலய கோபுரமாக நிறுவப்படுவது பாரம்பரியமுறையாக உள்ளது.


இந்த ஆண்டு சிவராத்திரி விழா இன்று துவங்குகிறது இதையொட்டி திருச்சப்பரம் செய்யப்படும் பூலாங்கிணறு கிராமத்தில் நேற்று இரவு 8 மணிக்கு திருச்சப்பர பூஜை நடந்தது. தொடர்ந்து திருச்சப்பரம் புறப்பட்டு
வழியோர கிராமங்களில் திருச்சப்பரத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது பொதுமக்கள் தாங்கள் விளைவித்த தேங்காய் பழம் நெற்கதிர் சிறுதானியங்கள் உப்பு காய்கறிகள் வீசி வழிபாடு நடத்தினர்.


இன்று மாலை 4 மணிக்கு திருச்சப்பரம் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.தொடர்ந்து கோவிலுக்கு அருகே உள்ள யானை உரசும் பாறை அருகே மலைவாழ் மக்கள் வனங்களில் சேகரித்த தேன் விளைவித்த மலை காய்கறிகள் தினை உள்ளிட்ட பொருள்கள் படைத்தும் பாரம்பரிய நடனம் ஆடியும் வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது‌.


தொடர்ந்து திருச்சப்பரம் மூர்த்திகள் எழுந்தருளி வரும் மூலவர் கோபுரம் விமானமாக நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
அதன் பின்னர் சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகள் துவங்குகின்றன. நான்கு காலபூஜைக்குப் பின் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் 16 தீப தரிசனம் எனப்படும் சோடச உபசார தீபாராதனை நடக்கிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )