BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் குறித்து பேட்டி சித்தராமையாவுக்கு ஓபிஎஸ் கண்டனம்.

சென்னை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று பேட்டி அளித்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான செயல்.

மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழ்நாட்டின் நலன் பாதிக்காது என்று கூறுவதும், தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று சொல்வதும் நியாயமற்ற செயல். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே அணையை கட்ட முடியாது என்பதையும், இவ்வாறு கூறுவதே காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணான செயல் என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டிற்கு எதிரான கர்நாடகாவின் இந்த செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )