BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கை,வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைப்பு.

தஞ்சாவூர் நகரில் பல பகுதிகளில் மாநகராட்சிக்கு மற்றும் அரசுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது, இந்நிலையில் இங்கு இயங்கி வரும் கடைகளில் வாடகை நிலுவைத் தொகை மற்றும் உள்வாடகைக்கு விடுதல் போன்ற செயல்களில் கடை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தஞ்சை வருவாய்த்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வாடகை செலுத்தாத கடைகள் மற்றும் உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகள் என பூட்டி சீல் வைக்கப்பட்டது அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சிக்கு எதிரில் சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடத்தில் உள்ள டீக்கடை, உணவகம், திருமண தகவல் மையம், மற்றும் தனிநபர் அலுவலகம் என 4 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

இதில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா,வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், சத்திரம் நிர்வாக அலுவலர் (பொ) ராமலிங்கம், தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )