BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மார்ச் 3 வது வாரம் தமிழக அமைச்சரவை கூட்டம் பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்.

மார்ச் 3 வது வாரத்தில் தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து இன்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கின்றனர். மேலும் நாளை மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பெரும்பாலான பதவிகளில் தி.மு.கவினரே அமர உள்ளனர். இந்நிலையில் மார்ச் மூன்றாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தமிழக அரசின் பட்ஜெட் 18-ஆம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் 19ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற உள்ள அம்சங்கள் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த பட்ஜெட் தொடர் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மு. க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது குறித்த ஆலோசனையும் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )