தலைப்பு செய்திகள்
தமிழக அரசின் உத்தரவின்படி 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது என மடத்துக்குளம் வட்டார பகுதியில் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழக அரசின் உத்தரவின்படி 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது என மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள உணவகங்கள், ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் தற்போது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மடத்துக்குளம் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்கள், கேரிபேக் பயன்பாடுகள் அதிகரித்து உள்ளன.
டீ கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் இதனை இப்பகுதியில் உள்ள அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, அதிகாரிகள் கையூட்டு பெறுகிறார்களா என சந்தேகம் எழுதுதுள்ளதாக? சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மடத்துக்குளம் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.