BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சி 36-வது வார்டு பாஜக வேட்பாளர்.ஆர்.ரமேஷ் இன்று நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்பு .

நாகர்கோவில் மாநகராட்சி 36-வது வார்டு பாஜக வேட்பாளர்.ஆர்.ரமேஷ் இன்று நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலராக பதவி ஏற்றுக்கொண்டார். நேற்று உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நேற்று புதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் கவுன்சிலராக பதவி ஏற்று கொண்டார், பின்னர் பாஜக கவுன்சிலர் ரமேஷின் மகள் தந்தைக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 52 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர் இந்நிலையில் 36-வது வார்டு பாஜக உறுப்பினர்.ஆர்.ரமேஷ் உடல் நலக்குறைவால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை,இதனால் இன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான ஆஷா அஜித் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்,அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலக ஊழியர்களுக்கூ இனிப்பு வழங்கினார், பின்னர் பதவி ஏற்றுக்கொண்டார்,பின்னர் கவுன்சிலர் ரமேஷின் மகள் தனது தந்தைக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )