தலைப்பு செய்திகள்
திருநங்கைகளுக்காக தமிழக அரசு புதிய விதி !
தமிழகத்தில் விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளுக்கு போலீசாரால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில்விசாரணை என்ற பெயரில் திருநங்கைகளுக்கு பாலியல் தொந்தரவை தவிர்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவல்துறையினரின் நடத்தை விதிகள் 24 சி தொடர்பான விதிகளின் அடிப்படையில்தான் காவல்துறையினர் திருநங்கைகளை விசாரிக்க வேண்டும் எனதமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் காவல்துறையினர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized