தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் பெரியகுளம் நகராட்சியின் 24வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் வீடு வீடாகச் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் சண்முக சுந்தரம் அதிக ஆட்களை கூட்டிச் செல்லாமல் தனியாக இரண்டு நபர்கள் உடன் சென்று அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அவர் வெற்றி பெற்றால் அவருடைய 24-வது வார்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செய்து தருவதாகவும் வார்டு அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களின் குறைகளை தெரிவிக்க தனியான தொலைபேசி எண் வழங்கப்படும் எனவும் வருடத்திற்கு ஒருமுறை அவரது வார்டில் மருத்துவ முகாம் அமைத்து நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .
எந்த நேரத்திலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முனைப்புடன் செயல்பட்டு மக்கள் பணியாற்றுவேன் என தெரிவித்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.