BREAKING NEWS

திருச்சி

சென்னை திமுக பிரமுகர் வெட்டி படுகொலை –
திருச்சியில் சிக்கிய இருவரிடம் போலீசார் விசாரணை.


சென்னையை அடுத்த மடிப் பாக்கம் 188-வதுதி.மு.க. வட்ட செயலாளரான செல்வம் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி மாநகராட்சி 188வது வார்ட்டில் தி.மு.க. சார் பில்போட்டியிட விருப்பமனு செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களு டன் பேசி கொண்டு இருந்த போது ஒரு செல்போன் அழைப்பு வந்தால் அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் சென்று சாலை பேசி கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த 5பேர்கொண்ட கும்பல் செல்வத்தை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடியது.

ரத்த வெள்ளத் தில் உயிருக்கு போராடிய
செல்வத்தை கட்சியினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவம் னையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட் டதாக தெரிவித்தனர்.

நகர்ப்புற உள் ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் ‘சீட்’கிடைப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமா? அல்லது ரியல் எஸ் டேட் தொழில் முன் விரோதம் காரணமர்க கொலை நடந்ததா? என 5 தனிப்படைகள் அமைத்து போலீ சார் கொலையா ளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் என கருதப்படும் நபர்கள் இனோவா காரில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சென்னை போலீசார் சமயபுரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இந்த தகவலை பகிர்ந்து உடன் அவர்களை மடக்கி பிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் சென்னை போலீசார் அது இனோவா காரை சினிமா பட பாணியில் பின் தொடர்ந்து விரட்டி வந்தனர். அப்போது இனோவா கார் சமயபுரம் சுங்க சாவடியில் நின்றபோது அங்கு தயாராக இருந்த சமயபுரம் போலீசார் காரில் இருந்தவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.

அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார் மீதமிருந்த ராதாகிருஷ்ணன் மற்றும் தணசீலன் இருவரும் சிக்கினர். சமயபுரம்

போலீசாரிடம் சிக்கிய இருவரும் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் அவர்கள் வந்த இனோவோ கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ராதாகிருஷ்ணன் அவர்கள் இருவரும் சென்னை போலீசாரால் சென்னை அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கொலை வழக்கில் இவர்களுக்கான தொடர்பு மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களின் விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )