BREAKING NEWS

திருச்சி

திருச்சி தேர்தல் மனு தாக்கல் அலுவலகத்தில் பஜாகவினருக்கும் காவல் துறையினருக்கு தல்லுமுள்ளு – பரபரப்பு.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் துவங்கி நாளை 4ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் பாஜகவினர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்றனர். பின்னர் வேட்பாளருடன் அனைவரும் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் செல்ல முற்பட்டனர்.
அவர்களை காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில் பாஜகவினரும் காவல்துறையில் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஆளும் கட்சியைத் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்யும் போது இரண்டுக்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படும் போது எங்களை ஏன் அனுமதிக்கவில்லை எனக் கோஷமிட்டு அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். பின்னர் வேட்பாளர் மற்றும் அவருடன் இரண்டு பேர் மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )