மாவட்ட செய்திகள்
அதிமுக சார்பில் பேரணி மூலம் வாக்கு சேகரித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான இன்று இறுதி தேர்தல் பரப்புரை முடிவடைகிறது.
இதை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையத்தில் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் இரா குமரகுரு. அவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மற்றும் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக வேட்பாளர்களுடன் மற்றும் தொண்டர்களுடன் அவர்கள் தலைமையில் பேரணியாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதற்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ் நகர செயலாளர் துரை மற்றும் சந்திரன் சண்முகவேல் இந்த பேரணியில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி