BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அபூர்வசாமி அறக்கட்டளை இணைந்து நடத்திய முப்பெரும் விழா.

தஞ்சாவூர், சோழாஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அபூர்வசாமி அறக்கட்டளை இணைந்து சோழாஸ் ரோட்டரி சங்க குடும்ப விழா, சிறப்பாக சேவை புரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் திலகம் விருது வழங்கும் விழா மற்றும் ரோட்டரி தினம் ஆகிய முப்பெரும் விழா தஞ்சையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்க தலைவரும், வழக்கறிஞருமான விவியன் அசோக் தலைமை வகித்தார். துணை ஆளுநர் பெலிக்ஸ் சுந்தர் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் சந்தான சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜன் கலந்துகொண்டு 7 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் திலகம் விருதை வழங்கி பாராட்டி பேசினார். அப்போது பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அனிதா பிரீமிளா பூரணிக்கு முதலாவதாக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை எலியாஸ், புதுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மாலதி, ஒரத்தநாடு தூய மரியன்னை நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியர் ஸ்டெல்லா மேரி, கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இராஜீ, சாத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் காசிராணி, தஞ்சாவூர் அரசர் தொடக்கப்பள்ளி (சத்திரம் நிர்வாகம்) இடைநிலை ஆசிரியர் சூசைமேரி ஆகிய 7 பேருக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விருது பெற்ற ஆசிரியர்கள் சார்பில் அனிதா பிரீமிளா பூரணி ஏற்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவரும், வழக்கறிஞருமான விவியன் அசோக், செயலாளர் இலக்குமண சாமி, பொருளாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். முடிவு செயலாளர் இலக்குமணசாமி நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )